குஷ்பு மீது பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார்!

 

குஷ்பு மீது பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார்!

மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக நடிகை குஷ்பு மீது பரங்கிமலை காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்பிராஜன் ஆன்லைன் மூலம் பரங்கிமலை காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் கொடுத்துள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, நேற்றைய முன்தினம் பாஜக-வில் இணைந்த திரைக்கலைஞர் குஷ்பு சுந்தர், அக்-13 அன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்பொழுது, காங்கிரஸ் கட்சியை “மூளை வளர்ச்சி இல்லாத கட்சி” என பேசியுள்ளார்.

குஷ்பு மீது பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார்!

இது குறித்து விரிவான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆனால், மாற்றுத்திறனாளிகள் விரோத, சட்டவிரோத மற்றும் தண்டனைக்குரிய தனது கருத்திற்கு வருத்தமோ, மறுப்போ குஷ்பு இதுவரை தெரிவிக்கவில்லை.

தனது அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக பயன்படுத்தியுள்ள அவருடைய இந்த கருத்து மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும், சிறுமைப்படுத்தும் விதத்திலான கருத்தாகும். ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016 பிரிவு 92(a)ன்படி, உள்நோக்குடன் மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் வகையில் பொதுவெளியில் பேசுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்திற்கு 6 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் உண்டு. எனவே காவல் துறையினர் குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.