குறவர் ஜாதியை இழிவுப்படுத்திய ரவுடி பேபி சூர்யா மீது போலீசில் புகார்

 

குறவர் ஜாதியை இழிவுப்படுத்திய ரவுடி பேபி சூர்யா மீது போலீசில் புகார்

மதுரையில் டிக் -டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குறிஞ்சியர் இன ஜனநாயக இயக்கம் சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குறவர் ஜாதியை இழிவுப்படுத்திய ரவுடி பேபி சூர்யா மீது போலீசில் புகார்

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற குறிஞ்சியர் மக்கள் ஜனநாயக இயக்கத்தின் சார்பில் 20க்கும் மேற்பட்டோர், டிக் – டாக் ரவுடி பேபி சூரியா மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனுவை காவல்துறை ஆணையர் பிரேமானந்த் சிங்காவிடம் அளித்தனர்.

அந்த மனுவில் சூர்யா எங்கள் ஜாதியான குறவர் ஜாதியை இழிவுபடுத்தும் வகையில் யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. எனவே நாங்கள் வெளியில் செல்லும்போது அவமானமாக இருக்கிறது. உடனடியாக அந்த சேனலை முடக்க வேண்டும். எங்கள் சாதியை இழிவுபடுத்திய ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.