நடிகை மீரா மிதுன் மீது விஜய் மக்கள் இயக்கத்தினர் புகார்!

 

நடிகை மீரா மிதுன் மீது விஜய் மக்கள் இயக்கத்தினர் புகார்!

தமிழில் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீராமிதுன். பிக்பாஸ் வீட்டுக்குள்ளே சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்ட வெளியேறிய மீரா மிதுன், வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பண மோசடி புகார் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப்பலருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் நாடி வந்த நிலையில் மீராமிதுன் மட்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் கசிகின்றன. அவ்வப்போது கவர்ச்சிப் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு முகம் சுழிக்க வைத்துவந்த மீரா, அண்மைகாலமாக டிவிட்டரில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

Meera Mithun

இந்நிலையில் நடிகை மீரா மிதுன், விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோர் கோலிவுட் மாஃபியாவை சேர்ந்தவர்கள் என்றும், ரஜினியை கன்னடர் என்றும், சமீபத்தில் விமர்சித்திருந்தார். மேலும் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகாவையும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமின்றி சூர்யாவிற்கு நடிப்பு என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என வரம்பு மீறி பேசியிருந்தார். இதனால் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பேசி வரும் நடிகை மீராமிதுன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. புகார் மனுவில், “விஜய் பற்றி கருத்து தெரிவித்ததற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்” என வலியுத்தியுள்ளனர்.