துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீது ஆள்கடத்தல் புகார்!

 

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீது ஆள்கடத்தல் புகார்!

தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா மீது காரைக்குடியில் ஆள்கடத்தல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன்னை கடத்தி, அடித்து மிரட்டியதாக ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மற்றும் அவரது மகன் அமர்நாத் மீது காரைக்குடி டிஎஸ்பி அருணிடம் மரக்கடை அதிபர் பழனி புகார் அளித்துள்ளார்.

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீது ஆள்கடத்தல் புகார்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மரப் பொருட்கள் விற்கும் நிறுவனம் நடத்தி வருபவர் பழனி, இவரிடமிருந்து ஓ.ராஜா மற்றும் அவரது மகன் அமர்நாத் ஆகியோர் மரச்சாமான்களை கொள்முதல் செய்துள்ளனர். அதற்கான நிலுவை தொகை ஒரு கோடியை ராஜா வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. நிலுவைத்தொகையை கேட்டபோது ராஜாவும், அமர்நாத்தும் தன்னை திருச்சிக்கு கடத்தி சென்றதாகவும், வெற்று பத்திரத்தில் எழுதி என்னை மிரட்டி அவர்கள் கையெழுத்து வாங்கியதாகவும் காரைக்குடியைச் சேர்ந்த மரக்கடை அதிபர் பழனி என்பவர் காரைக்குடி டிஎஸ்பி அருணிடம் புகாரளித்துள்ளார். இதனையடுத்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.