ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார்!

 

ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார்!

பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதை எதிர்த்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுக்க தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் படித்தார்களா, புரிந்ததா என்பது பற்றி கவலை இன்றி கட்டணம் வசூலிக்க ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார்!
அதே நேரத்தில் இந்த ஆன்லைன் வகுப்புகளில் வசதி இல்லாத மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. மாணவர்கள் வீட்டில் ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் இல்லாததால் அவர்களால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை. ஸ்மார்ட்போன் வாங்க முடியாததால் தாழ்வு மனப்பான்மை காரணமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார்!
இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் காரணமாக குழந்தைகள் மற்றும் பெற்றோர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அவர்கள் மன நலம், உடல் நலம் பாதிக்கப்படுவதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார்!
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் வாங்கித் தரவில்லை என்பதால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். பெற்றோர் செல்போன் வாங்கித் தரவில்லை என்ற மனவிரக்தி காரணமாக அவன் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.