பாமக கோரிக்கையை நிறைவேற்றும் ஸ்டாலின் : அன்புமணி மகிழ்ச்சி

 

பாமக கோரிக்கையை நிறைவேற்றும் ஸ்டாலின் : அன்புமணி மகிழ்ச்சி

கொரோனாவால் உயிரிழந்த காவல்துறையினருக்கு இழப்பீடு அறிவித்ததற்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு- போக்குவரத்து என எப்பணியிலும் அர்ப்பணிப்பைத் தருகிற காவல்துறையினரில் 84 பேர் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் போது இன்னுயிர் இழந்திருக்கிறார்கள்.எனவே அவர்களின் 13 வாரிசுகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மேலும் 36 குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.

பாமக கோரிக்கையை நிறைவேற்றும் ஸ்டாலின் : அன்புமணி மகிழ்ச்சி

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ” தமிழ்நாட்டில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரில் கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது!

கொரோனா தாக்கி உயிரிழந்த காவல்துறை குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நேற்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மேலும் 36 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க இன்று ஆணையிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.