“சூரப்பாவுக்கு எதிராக குழு அமைத்தது நியாயமற்ற நடவடிக்கை” – ஆளுநர் அதிருப்தி!

 

“சூரப்பாவுக்கு எதிராக குழு அமைத்தது நியாயமற்ற நடவடிக்கை” – ஆளுநர் அதிருப்தி!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்ததற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

“சூரப்பாவுக்கு எதிராக குழு அமைத்தது நியாயமற்ற நடவடிக்கை” – ஆளுநர் அதிருப்தி!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அத்துடன் அண்ணா பல்கலை,. சிறப்பு அந்தஸ்து தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதலை பெறாமலே சூரப்பா தன்னிசையாக செயல்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

“சூரப்பாவுக்கு எதிராக குழு அமைத்தது நியாயமற்ற நடவடிக்கை” – ஆளுநர் அதிருப்தி!

இதனால் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இதற்கான விசாரணையும் கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய நிலையில் தன் மீதான புகார்களை மறுத்த சூரப்பா, தான் எந்த ஊழலும் செய்யவில்லை, விசாரணைக்கு தயார் என்று தெரிவித்தார்.

“சூரப்பாவுக்கு எதிராக குழு அமைத்தது நியாயமற்ற நடவடிக்கை” – ஆளுநர் அதிருப்தி!

இந்நிலையில் சூரப்பாவுக்கு எதிராக குழு அமைத்தது நியாயமற்ற நடவடிக்கை எனவும் விசாரணையை முடித்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடிதம் எழுதியுள்ளார். துணைவேந்தரை விசாரிப்பதற்கான குழுவை தனக்கு தெரியாமல் அமைப்பது குறித்தும் ஆளுநர் அக்கடிதத்தில் அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது