“பெண்ணை ஏமாற்றியது நடிகர் ஆர்யா அல்ல” – சென்னை காவல் ஆணையர் பேட்டி!

 

“பெண்ணை ஏமாற்றியது நடிகர் ஆர்யா அல்ல” – சென்னை காவல் ஆணையர் பேட்டி!

நடிகர் ஆர்யா பண மோசடி செய்து விட்டதாக எழுந்த புகார் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்தார்.

பிரபல நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் விட்ஜா புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆர்யா என்ற பெயரில் வேறு ஒரு நபர் அந்த பெண்ணிடம் பண மோசடி செய்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

“பெண்ணை ஏமாற்றியது நடிகர் ஆர்யா அல்ல” – சென்னை காவல் ஆணையர் பேட்டி!

இது தொடர்பாக சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தன் மீது எழுந்த புகார் பற்றி நடிகர் ஆர்யா சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்திருந்தார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஜெர்மனியில் குடியேறிய இலங்கைப் பெண்ணை நடிகர் ஆர்யா ஏமாற்றவில்லை. புகாரின் அடிப்படையில் நடிகர் ஆர்யாவின் மீது வழக்கு பதியப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மொபைல் எண்ணை வைத்து இடத்தை கண்டுபிடித்த போது பெண் குரலில் பேசியது தெரிய வந்தது. உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடித்ததற்காக நடிகர் ஆர்யா எனக்கு நன்றி கூறினார் என்று தெரிவித்தார்.