விஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு

 

விஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க மாட்டேன் என்பதை, நன்றி!வணக்கம் என்று மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், அவர் இலங்கை தமிழர்களின் மனதை புரிந்துகொள்ளாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதை கண்டித்து, விஜய்சேதிபதியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாக டுவிட்டரில் மிரட்டல் விடுத்தார்.

விஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு

இதையடுத்து திமுக எம்.பிக்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், சம்பந்தப்பட்டவரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் வேறொரு கணக்கு மூலமாக வந்து மிரட்டல் விடுவார். ஆகவே, அவரை கண்டறிந்து சென்னை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி குடும்பம் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 153, 294(பி),Ipc 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். அடையாளம் தெரியாத நபர் என்ற பெயரில் வழக்குப்பதியப்பட்டுள்ளது. அதாவது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான கலகம் செய்ய தூண்டுதல், ஆபாசமாக திட்டுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.