தாலாட்டி தூங்க வைக்கிறதும், தன்னம்பிக்கையா தட்டிக்குடுத்து ஓட வைக்கிறதும் உங்க பாட்டுத்தான்! எஸ்.பி.பி குறித்து நடிகர் சூரி உருக்கம்

 

தாலாட்டி தூங்க வைக்கிறதும், தன்னம்பிக்கையா தட்டிக்குடுத்து ஓட வைக்கிறதும் உங்க பாட்டுத்தான்! எஸ்.பி.பி குறித்து நடிகர் சூரி உருக்கம்

50 ஆண்டு கால திரையுலக இசை பயணம் மூலம் கோடான கோடி ரசிகர்களை தன்வசம் கட்டிபோட்டு வைத்திருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள அவருக்கு கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது. ஆனால் ரசிகர்களின் பிரார்த்தனையால் தந்தை நலமுடன் இருப்பதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்திருந்தார்.

தாலாட்டி தூங்க வைக்கிறதும், தன்னம்பிக்கையா தட்டிக்குடுத்து ஓட வைக்கிறதும் உங்க பாட்டுத்தான்! எஸ்.பி.பி குறித்து நடிகர் சூரி உருக்கம்

இந்நிலையில் எஸ்.பி.பி நலம் பெற வேண்டி காமெடி நடிகர் சூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்.பி.பி. சார், விவரம் தெரிஞ்சு உங்க குரல கேக்காம நாங்க ஒரு நாளக்கூட கடந்ததில்ல!! விடியக்கால நடந்தாலும் சரி, வீட்ல விசேஷம்னாலும் சரி, தாலாட்டி எங்கள தூங்க வைக்கிறதும் சரி, தன்னம்பிக்கையா தட்டிக்குடுத்து ஓட வைக்கிறதும் சரி, எப்பவுமே உங்க பாட்டுத்தான்!! எப்பவும் போல இதே சிரிச்ச முகத்தோட நீங்க திரும்ப வந்து எங்களுக்காக பாடனும்- உங்க குரல கேட்டுக்கிட்டே எங்க மீது வாழ்க ஓடனும்ன்னு. ஆத்தா மதுரை மீனாட்சிய மனசார வேண்டிக்கிறேன் சார்… ” எனக் குறிப்பிட்டுள்ளார்.