புதுச்சேரியில் டிச.17 முதல் கல்லூரிகள் திறப்பு!

 

புதுச்சேரியில் டிச.17 முதல் கல்லூரிகள் திறப்பு!

புதுச்சேரியில் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அம்மாநில உயர்கல்வித்துறை அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன என்பதை அனைவரும் அறிவோம். கொரோனா அச்சுறுத்தலால் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டு வகுப்புகளும் தற்போது ஆன்லைனிலேயே தொடருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு டிச.7ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டது.

புதுச்சேரியில் டிச.17 முதல் கல்லூரிகள் திறப்பு!

இந்நிலையில் புதுச்சேரியில் வரும் டிச.17ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பிற்கான இறுதியாண்டு வகுப்புகள் வரும் 17 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளதாகவும், கல்லூரிகள் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது.