கல்லூரி மாணவன் தீக்குளித்து தற்கொலை

 

கல்லூரி மாணவன் தீக்குளித்து தற்கொலை

சென்னை திருவொற்றியூரில் கல்லூரி மாணவன் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவன் தீக்குளித்து தற்கொலை

திருவொற்றியூர் குப்பம் பகுதியை மீனவ குடும்பத்தை சேர்ந்தவர் அபினேஷ். 19 வயதான இவர், வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் பிட்டி தியாகராயர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு B. COM. படித்து வருகிறார். நேற்று கல்லூரி திறந்த நிலையில், முதல் நாளிலேயே காலை கல்லுரிக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார். இன்று அதிகாலை தந்தை சீதாபதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார். தாய் தேவி மீன் விற்க சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அபினேஷ் மண்ணெண்ணெய் தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்

வீட்டில் புகை வந்ததையும், அலறல் சத்தத்தையும் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அபினேஷ் உடலில் பயங்கர தீ காயங்கள் இருந்ததை பார்த்து உடனடியாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அபினேஷ் மீட்டு சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். ஆனால்சிகிச்சை பலனின்றி அபினேஷ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அபினேஷ்க்கு கடந்த 20 நாட்களாக வயிற்று வலி இருந்தது தெரியவந்தது