கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவன் குத்தி கொலை!

 

கிறிஸ்துமஸ்  கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவன் குத்தி கொலை!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ்  கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவன் குத்தி கொலை!

இந்த சூழலில் திருவள்ளூர் புதுச்சத்திரம் பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கடற்சார்பு படிப்பு படிக்கும் மாணவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சக மாணவருடன் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஆதித்ய சர்மா குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். பிளாஸ்டிக் நாற்காலியால் ஆதித்ய சர்மா குத்திக் கொல்லப்பட்டது குறித்து வெள்ளவேடு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

கிறிஸ்துமஸ்  கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவன் குத்தி கொலை!

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதே பகுதியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. இதில் அசோக் குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அவருடைய நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.