இருசக்கர வாகனம் பாலத்தில் மோதியதில், கல்லூரி மாணவர் பலி!

 

இருசக்கர வாகனம் பாலத்தில் மோதியதில், கல்லூரி மாணவர் பலி!

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே பாலத்தின் தடுப்புச்சுவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அரசுக்கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காந்தி நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசுக் கல்லூரியில் முதுகலை ஆங்கிலம் படித்து வந்தார். தமிழ்செல்வன் தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரி செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று கல்லூரிக்கு சென்ற அவர், வகுப்பு முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். சின்னசேலம் அடுத்த வாசுதேவ நல்லூர் பகுதியில் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் சென்றபோது எதிர்பாரத விதமாக இரும்பு தடுப்பின் மீது வாகனம் மோதியது.

இருசக்கர வாகனம் பாலத்தில் மோதியதில், கல்லூரி மாணவர் பலி!

இதில் பலத்த காயமடைந்த தமிழ்செல்வனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

விபத்து குறித்து, தமிழ்செல்வன் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.