மரத்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

 

மரத்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

நெல்லை

நெல்லை மாவட்டம் கடையம் அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் கடையம் பாரதி நகரை சேர்ந்தவர் கணேசன். விவசாயி. இவரது மகன் முகேஷ் (20). இவர் ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்த முகேஷ், நேற்று முன்தினம் நண்பர்களுடன் தோட்டத்தில் உள்ள பனை மரத்திற்கு நுங்கு பறிக்க சென்றார்.

மரத்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

பனை மரத்தில் ஏறியபோது எதிர்பாராத விதமாக கால் தவறி முகேஷ் கீழே விழுந்தார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது நண்பர்கள் உடனடியாக முகேஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகேஷ் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து, கணேசன் அளித்த புகாரின் பேரில் கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.