காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்த முடியாததால் விரக்தி! தூக்கில் தொங்கி உயிர்மூச்சை நிறுத்திய கல்லூரி மாணவி!

 

காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்த முடியாததால் விரக்தி! தூக்கில் தொங்கி உயிர்மூச்சை நிறுத்திய கல்லூரி மாணவி!

தன்னை திருமணம் செய்துகொள்வான் காதலன் என்று காத்திருக்கையில், காதலனோ வேறொரு பெண்ணை கரம் பிடிக்க உறுதியாக இருந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவியில் செயல் புதுச்சேரியை அதிர வைத்துள்ளது.

புதுச்சேரி சேதராப்பட்டை சேர்ந்த சரவணன், தனியார் நிறுனத்தில் ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர், தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரியை காதலித்து வந்தார்.

காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்த முடியாததால் விரக்தி! தூக்கில் தொங்கி உயிர்மூச்சை நிறுத்திய கல்லூரி மாணவி!

இவர்களது காதல் கல்யாணம் வரைக்கும் செல்லும் அளவுக்கு தீவிரமாக இருந்ததைக் கண்ட சரவணனின் பெற்றோர், காதலுக்கு தடை போட்டனர். மீண்டும் இவர்களது காதல் தொடராமல் இருக்க ஒரு அதிரடி முடிவையும் எடுத்தனர். அதன்படி, சரவணனுக்கு அவசர அவசரமாக பெண் பார்த்து, திருமணத்திற்கும் நாள் குறித்துவிட்டனர்.

தன் காதலன் சரவணனுக்கு வரும் 14ம் தேதி திருமணம் என்ற செய்தியை கேட்டதும் துடிதுடித்த காயத்ரி, சரவணனையும், அவரது குடும்பத்தினரையும் சமாதானப்படுத்த எத்தனையோ முயற்சித்தும், எல்லாம் தோல்வியில் முடிந்ததால், விரக்தியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.