கால்வாயில் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

 

கால்வாயில் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

திருவள்ளூர்

பூண்டி ஏரி கால்வாயில் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் இம்ரான் ஷேக். இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் பூண்டி கால்வாயில் குளிக்க சென்றுள்ளனர். பூண்டி கால்வாயில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கால்வாயில் குளித்த இம்ரான்ஷேக் மற்றும் அவரது நண்பர் பிரவீன் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து அவரது நண்பர்கள் விரைந்து சென்று பிரவீனை காப்பாற்றிய நிலையில், இம்ரான் ஷேக் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

கால்வாயில் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!


இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், கால்வாயில் தண்ணீரை நிறுத்திவிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை திருவள்ளூர் அடுத்த ஈக்காடு அருகே இம்ரான் உடல் மீட்கப்பட்டு, பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.