திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி!

 

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி!

திருச்சி

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (18). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், மணிகண்டன் நேற்று நண்பர்களுடன், முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றார்.

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி!

பூங்காவை சுற்றிபார்த்த பின்னர், மணிகண்டன் நணபர்களுடன் இணைந்து காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்ட மணிகண்டன் நீரில் மூழ்கி மாயமாகினார். இதனை கண்டு அவரது நண்பர்கள் கூச்சலிட்டதால், அந்த பகுதியில் இருந்த மீனவர்கள் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணிநேர தேடலுக்கு பின் அவர்கள், மணிகண்டனை சடலமாக மீட்டனர். தகவல் அறிந்த ஜீயபுரம் காவல் நிலைய போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.