இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் பலி!

 

இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் பலி!

அரியலூர்

அரியலூரில் சாலை தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அபிஷ்நாத். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று அரியலூர் பெரியதெருவில் நடந்த உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அபிஷ்நாத், பின்னர் உறவினரான புண்ணியமூர்த்தி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் பலி!

அரியலூர் அம்மாகுளம் புறவழிச்சாலை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் சாலை தடுப்பின் மீது மோதியதில், இருவரும் நிலை தடுமாறி விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில் அபிஷ்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த புண்ணியமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அவர் மேல் சிகிச்சைகாக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ப்டடார். விபத்து குறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட எஸ்.பி., பெரோஷ்கான் அப்துல்லா தலைமையில் போலீசார், அபிஷ்நாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.