கல்லூரி மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை!

 

கல்லூரி மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை!

கன்னியாகுமரி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி லூர்துமாதா பகுதியில் வசித்து வந்த இளம்பெண் மேரி ஸ்டானிஸ்டா (20). இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு திடீரென மேரி தனது படுக்கையறையில் இருக்கும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இன்று காலை அவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கல்லூரி மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை!

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவியின் தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மாணவி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் நண்பர்களை விசாரிக்க போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.