ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல்… கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை…

 

ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல்… கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை…

சிவகாசி

அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதாக காதலன் மிரட்டியதால், கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் அச்சக ஊழியர் பாலசுப்பிரமணி. இவரது 18 வயது மகள், அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவிக்கு, கோவில்பட்டியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் விக்னேஷ்வரன் என்பவருடன் காதல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், ஆபாசமாக படங்களையும் எடுத்துள்ளார்.

ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல்… கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை…

இந்த நிலையில் விக்னேஷின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மாணவி, சில நாட்களாக அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆத்திரமடைந்த விக்னேஷ், மாணவியின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, நேற்று வீட்டில் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில், பலத்த தீக்காயம் அடைந்த மாணவியை உறவினர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல், இன்று காலை பரிதாமாக உயிரிழந்தார். தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, விக்னேஷ்வரனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.