விவசாய வேலை செய்யும்படி பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவன் தற்கொலை

 

விவசாய வேலை செய்யும்படி பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவன் தற்கொலை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வயல் வேலை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய வேலை செய்யும்படி பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவன் தற்கொலை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கோவில்பத்து மாதா கோவில் தெருவைச் சேர்ந்த வீரையன் என்பவரது மகன் சுரேஷ்குமார் (வயது 23). இவர் திருவாரூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவரது பெற்றோர் தனது சொந்த வயலில் பருத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனோ தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், சுரேஷ் கல்லூரிக்கு செல்லவில்லை “வீட்டில் சும்மா தானே இருக்கிறாய் நமது வயலில் பருத்தி எடுக்கலாமே” என்று அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுரேஷ்குமார் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.