தேர்வு பயத்தால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவர்!

 

தேர்வு பயத்தால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவர்!

நாமக்கல் அருகே தேர்வு பயத்தின் காரணமாக தனியார் கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு பயத்தால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவர்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஈகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ். கட்டுமான தொழிலாளியான இவரது மகன் கோவிந்தராஜ் என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று கல்லூரியில் நடைபெற இருந்த செய்முறை தேர்வுக்காக நேற்று இரவு முழுவதும் மாணவன் கோவிந்தராஜ் படித்து வந்துள்ளார். இருப்பினும் தேர்வு தோல்வி பயத்தின் காரணமாக கோவிந்தராஜ் இன்று காலை கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, மாம்பாளையம் பகுதியில் விவசாய தோட்ட கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து கல்லூரி மாணவனின் பை,அடையாள அட்டை உள்ளிட்டவை அப்பகுதியில் கிணற்று மேட்டில் இருந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய மாணவன் கோவிந்தராஜை 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்டனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் போலீசார் உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு தோல்வி பயத்தின் காரணமாக கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.