காதலன் இறந்த வேதனையில், பொறியியல் மாணவி தற்கொலை!

 

காதலன் இறந்த வேதனையில், பொறியியல் மாணவி தற்கொலை!

கோவை

கோவை அருகே காதலன் இறந்த வேதனையில், பொறியியில் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கபிலி பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். தனியார் நிறுவன மேலாளர். இவரது மகள் பார்த்தினி (19). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது, கல்லூரியில் உடன் படித்துவந்த உடுமலையை சேர்ந்த ரமேஷ் என்பவரை, பார்த்தினி காதலித்து வந்துள்ளார்.

காதலன் இறந்த வேதனையில், பொறியியல் மாணவி தற்கொலை!

இந்த நிலையில், கடந்த செவ்வாய் அன்று நடந்த சாலை விபத்தில் ரமேஷ் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பார்த்தினி, நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த பார்த்தினை உறவினர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பார்த்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.