கல்லூரி இறுதியாண்டு தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்! – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

 

கல்லூரி இறுதியாண்டு தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்! – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்து செய்து முந்தைய பருவ மதிப்பெண் அடிப்படையில் பட்டங்கள் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாய்ச்சல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா கட்டுக்குள் வந்தால்தான் பள்ளி, கல்லூரியைத் திறக்க முடியும் என்ற நிலையில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தங்களுக்கு தேர்வு எப்போது நடக்கும் என்று தெரியாமல் மன அழுத்தத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கும் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கல்லூரி இறுதியாண்டு தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்! – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 22ம் தேதி) வெளியிட்டுள்ள ட்வீட்களில், “சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி தமிழக அரசு இன்னும் முடிவெடுக்காமல் இழுத்தடிப்பது சரியானது அல்ல.
ஏற்கனவே இது தொடர்பாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையைச் சுட்டிக் காட்டிய பிறகும் தமிழக அரசு முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மன அழுத்தத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

http://

http://


எனவே,கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு முந்தைய பருவ மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிட வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைப் போல இதிலும் கடைசி வரை அரசு குழப்பிக் கொண்டே இருக்காமல் விரைவாக முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.