`செப்டம்பருக்குள் கல்லூரி தேர்வுகளை நடத்த இயலாது!’- மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய முதல்வர் பழனிசாமி

 

`செப்டம்பருக்குள் கல்லூரி தேர்வுகளை நடத்த இயலாது!’- மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய முதல்வர் பழனிசாமி

செப்டம்பர் மாதத்துக்குள் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

`செப்டம்பருக்குள் கல்லூரி தேர்வுகளை நடத்த இயலாது!’- மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய முதல்வர் பழனிசாமி

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவு படிப்படியாக தளர்வு செய்யப்பட்டாலும், கொரோனா தொற்றில் இருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. வரும் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதனிடையே, செப்டம்பர் மாதத்துக்குள் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

`செப்டம்பருக்குள் கல்லூரி தேர்வுகளை நடத்த இயலாது!’- மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய முதல்வர் பழனிசாமி

அந்த கடிதத்தில், “செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது” என்றும் “செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பதை மாநில அரசுகளே தீர்மானிக்க அதிகாரம் வழங்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.