தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கிய ஆட்சியர்!

 

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கிய ஆட்சியர்!

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 9 ஆசிரியர், ஆசிரியைகளுககு மாவட்ட ஆட்சியர் திவ்யதஷினி பாராட்டு சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தருமபுரி மாவட்டத்தில் தேர்வான 9 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு விருது வழங்கம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கலந்துகொண்டு விருதுக்கு தேர்வான 9 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கான பாராட்டு சான்றிதழ், வெள்ளிப்பதக்கம் மற்றும் ரூ.10ஆயிரம் ரொக்கப்பரிசு ஆகியவற்றை வழங்கினார்.

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கிய ஆட்சியர்!

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஹேமலதா, மாவட்ட கல்வி அலுவலர்கள் தருமபுரி இரா.பாலசுப்பிரமணி, அரூர் மு.பொன்முடி, பாலக்கோடு சண்முகவேல் உள்பட தொடர்புடைய அதிகாரிகள் உடனிருந்தனர்.

விருதுபெற்ற ஆசிரியர்களின் விபரம் – 1.செந்தில் செல்வம், உடற்கல்வி ஆசிரியர், அதகபாடி அரசு மேல்நிலைப்பள்ளி, 2.இரா. சிவமூர்த்தி, தலைமை ஆசிரியர், பாலவாடி அரசு உயர்நிலைப்பள்ளி, 3. அ.சர்மிளா, பட்டதாரி ஆசிரியை, பொம்ம அள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, 4. ம.வெ.வாசுதேவன், முதுகலை ஆசிரியர், தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி, 5. கு.முருகன், தலைமை ஆசிரியர், அரூர் ஒன்றியம் ராயப்பன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கிய ஆட்சியர்!

6. கு.சரவணன், தலைமை ஆசிரியர் காரிமங்கலம் ஒன்றியம் குண்டலஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 7. இரா. சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர், பென்னாகரம் ஒன்றியம் கோடி அள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 8. கோ. அமுதா, தலைமை ஆசிரியர், அதகபாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 9. சு.கவிதா, ஆசிரியை, தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.