காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரிக்கு கொரோனா!

 

காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரிக்கு கொரோனா!

காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரிக்கு கொரோனா!

கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி, கடந்த 30ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் போன்ற பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரிக்கு கொரோனா!

முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் ஏற்கனவே கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.