தஞ்சையில் இளம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய ஆட்சியர்!

 

தஞ்சையில் இளம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய ஆட்சியர்!

தஞ்சை

தஞ்சையில் புதிய வாக்காளர்களுக்கு, வாக்களர் அடையாள அட்டை வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் கோவிந்தா ராவ் இன்று தொடங்கி வைத்தார்.

தஞ்சை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு, புதிய வாக்காளர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தஞ்சை செல்வராஜ் மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கோவிந்தா ராவ் கலந்துகொண்டு, இளம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

தஞ்சையில் இளம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய ஆட்சியர்!

இந்த முகாமின்போது, புதிதாக சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது குறைவாக வாக்குப்பதிவாகிய தஞ்சை அருளானந்தம் நகர் பகுதி குடியிருப்பு வாசிகளிடம் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, ஆட்சியர் கோவிந்தா ராவ் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.