கும்பகோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

 

கும்பகோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

தஞ்சாவூர்

கும்பகோணம் அரசு கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை இன்று தஞ்சை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் பாபநாசம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள், கும்பகோணம் அரசுக்கலை கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்பட உள்ளன.

இதனையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியும் ஆன கோவிந்தாராவ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா? என்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கும்பகோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

இந்த ஆய்வின்போது, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். முன்னதாக, தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நவீன எல்இடி வாகனத்தில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்களின் ஒளிபரப்பை ஆட்சியர் கோவிந்தாராவ் தொடங்கி வைத்தார்.