“கோயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை” – நாகையில் அதிர்ச்சி!

 

“கோயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை” – நாகையில் அதிர்ச்சி!

நாகையில் பெண்ணை கோயிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கோயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை” – நாகையில் அதிர்ச்சி!

தமிழகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக தொடர்ந்து குற்றங்கள் அரங்கேறி வருகிறது. இதை தடுக்க முறையான சட்டம் இருந்தும், அதற்கான தண்டனைகள் கடுமையாக்கப்படாததே இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து அரங்கேற காரணம் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

“கோயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை” – நாகையில் அதிர்ச்சி!

இந்நிலையில் நாகை மாவட்டம் வெளிப்பாளையம் காமராஜர் காலனியில் உள்ள கோயிலில் பெண் தொழிலாளிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இளைஞர்கள் சிலர் பெண்ணை வழிமறித்து தாக்கி கோயிலுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் அவரது சகோதரி வீட்டுக்கு சென்று இளைஞர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜம்மு- காஷ்மீர், உத்தரபிரதேசத்தில் நடந்ததைப் போல தமிழகத்திலும் கோவிலில் பாலியல் வன்கொடுமை கொடூரம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.