கோயிலுக்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை : “மனித மிருகங்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” !

 

கோயிலுக்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை : “மனித மிருகங்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” !

பெண்ணை கோயிலுக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோயிலுக்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை : “மனித மிருகங்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” !

நாகை வெளிப்பாளையம் காமராஜர் காலனியில் இளைஞர்கள் இருவர், பெண் கூலி தொழிலாளியை வழிமறித்து அங்கிருந்த கோயிலுக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கணவனை இழந்த அந்த பெண் தனது சகோதரி வீட்டில் தங்கி வந்த நிலையில் அவரின் வீட்டுக்கு சென்ற இளைஞர்கள், மிரட்டல் விடுத்துள்ளனர்.

கோயிலுக்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை : “மனித மிருகங்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” !

தற்போது வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாகை மாவட்டம் நாகூர் நாகத்தோப்பு என்ற இடத்தில் கூலி வேலைக்கு சென்று திரும்பிய இளம்பெண்ணை இரு இளைஞர்கள் கோயிலுக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.மனித நேயமற்ற மிருகத்தனமான இந்த செயலை செய்த மனித மிருகங்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

மனித மிருகங்களுக்கு துணை போனவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தரமான சிகிச்சை வழங்க வேண்டும்! பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக 2013-ஆம் ஆண்டில் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அதன்மூலம் பெண்கள் பாதுகாப்பாக நடமாடுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.