திருமண ஆசை… பல இடங்களுக்கு சென்று உல்லாசம்… கர்ப்பிணி சிறுமியை மணக்க இருந்த மைனர் மாப்பிளை சிக்கினார்

 

திருமண ஆசை… பல இடங்களுக்கு சென்று உல்லாசம்… கர்ப்பிணி சிறுமியை மணக்க இருந்த மைனர் மாப்பிளை சிக்கினார்

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை மணக்க இருந்த வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவை மாவட்டம், தேரம்பாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் வசித்து வரும் சிவலிங்கனுக்கும் (26), இதே பகுதியில் வசித்து வரும் ராணிக்கும் (பெயர் மாற்றம்) என்ற சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. ராணி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்துள்ளது. இவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். “உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்ற கூறி ராணியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் சிவலிங்கம். இந்த நிலையில் ராணிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராணியை அவரது தாயார் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, பரிசோதனை செய்த டாக்டர், ராணி கர்ப்பமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார் டாக்டர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதற்கு காரணமானவன் யார் என்று ராணியிடம் கேட்டுள்ளனர். அதற்கு ராணி, சிவலிங்கம் என்று கூறியுள்ளார்.

சம்பவத்தன்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தார். இதனைகேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து சிவலிங்கத்திடம் ராணியின் பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது, ராணியை தன்னுடைய மகன் திருமணம் செய்து கொள்வதாக பெற்றோர் கூறியுள்ளனர். இதையடுத்து, திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவருக்கும் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதனிடையே, ராணியின் திருமணம் குறித்து கேள்விப்பட்ட பரிசோதனை செய்த தனியார் மருத்துவமனை நிர்வாகம், இது குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பிடம் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த அமைப்பின் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராணியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ராணியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவலிங்கம் மீது துடியலூர் காவல்துறையில் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், புதுமாப்பிள்ளை சிவலிங்கத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

வன்கொடுமை செய்த சிறுமியை திருமணம் செய்ய இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.