பேசுவதை நிறுத்திய காதலி : கத்தியால் குத்தி கொன்ற காதலன்; கோவையில் பரபரப்பு!

 

பேசுவதை நிறுத்திய காதலி : கத்தியால் குத்தி கொன்ற காதலன்; கோவையில் பரபரப்பு!

கோவை பேரூர் செட்டிபாளையம் ஆறுமுக கவுண்டர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் ஐஸ்வர்யா பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஐஸ்வர்யாவும் அதே பகுதியை சேர்ந்த ரித்தீஷ் என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவர பெண்ணின் வீட்டார் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால் ஐஸ்வர்யா ரித்தீஷ் உடன் பேசுவதை நிறுத்தியதாக தெரிகிறது.

பேசுவதை நிறுத்திய காதலி : கத்தியால் குத்தி கொன்ற காதலன்; கோவையில் பரபரப்பு!

இந்நிலையில் ஆத்திரமடைந்த ரித்தீஷ் நேற்று இரவு ஐஸ்வர்யா தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். அப்போது மகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது தந்தை சக்திவேல் ரித்தீஷை தடுக்க முயன்ற போது அவருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது இதையடுத்து ரித்தீஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பேசுவதை நிறுத்திய காதலி : கத்தியால் குத்தி கொன்ற காதலன்; கோவையில் பரபரப்பு!

இதைத்தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஐஸ்வர்யா மற்றும் அவரது தந்தை சக்திவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் ஐஸ்வர்யா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் தொடர்ந்து சக்திவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தப்பியோடிய ரித்தீஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.