கோவை- முரளிதரன் வேடத்தில் நடிப்பதை கைவிட நேரில் வலியுறுத்துவோம் – கு.ராமகிருஷ்ணன்

 

கோவை- முரளிதரன் வேடத்தில் நடிப்பதை கைவிட நேரில் வலியுறுத்துவோம் – கு.ராமகிருஷ்ணன்

கோவை

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடிக்க வேண்டாம் என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம்

கோவை- முரளிதரன் வேடத்தில் நடிப்பதை கைவிட நேரில் வலியுறுத்துவோம் – கு.ராமகிருஷ்ணன்

பேசிய அவர், இனப்படுகொலையின் போது இலங்கை அரசுக்கும், ராஜபக்சேவிற்கும் உறுதுணையாக முத்தையா முரளிதரன் செயல்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், இதுகுறித்து வரும் 21ஆம் தேதி சென்னையில் உள்ள விஜய்சேதுபதியின் வீட்டில் அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி

கோவை- முரளிதரன் வேடத்தில் நடிப்பதை கைவிட நேரில் வலியுறுத்துவோம் – கு.ராமகிருஷ்ணன்

படத்தில் நடிக்க வேண்டாம் என கேட்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி வரும் 23ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.