அடுத்தடுத்து தந்தை, தாய் உயிரிழப்பு… விரக்தியில் வங்கி ஊழியர் தற்கொலை…

 

அடுத்தடுத்து தந்தை, தாய் உயிரிழப்பு… விரக்தியில் வங்கி ஊழியர் தற்கொலை…

கோயமுத்தூர்

போத்தனூரில் தந்தையும், தாயும் அடுத்தடுத்து உயிரிழந்த சோகத்தில் தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் போத்தனூர் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் முரளிதரன்(39). தனியார் வங்கி ஊழியர். இவருக்கு தமிழ்மலர் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் முரளிதரனின் தந்தை கந்தசாமி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவரது தாயார் தனலட்சுமி, கடந்த 3ஆம் தேதி அன்று உயிரிழந்தார். அடுத்தடுத்து ஒரு வார காலத்திற்குள் தந்தையும், தாயும் உயிரிழந்ததால் முரளிதரன் விரக்தி அடைந்துள்ளார். மேலும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து தந்தை, தாய் உயிரிழப்பு… விரக்தியில் வங்கி ஊழியர் தற்கொலை…

இதனால் கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை தமிழ்மலர் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், பணிமுடித்து வந்த முரளிதரன் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாலை வீட்டிற்கு திரும்பியபோது கணவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழ்மலர், இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.