கோவை- வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.50 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
Oct 17, 2020, 12:29 IST1602917987000
கோவை
கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 50 ஆயிரம் ரூபாய்
பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகள் லஞ்சம் பெறுவது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று மாலை 7 மணியளவில்
கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இரவு 10.30 மணி வரை நீடித்த இந்த சோதனையில், கணக்கில் வராத 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்
செய்யப்பட்டது. இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.