திருமணம் செய்ய மறுத்த காதலி… விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞர்…

 

திருமணம் செய்ய மறுத்த காதலி… விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞர்…

கோவை

கோவை அருகே காதலி திருமணம் செய்ய மறுத்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (25). இவர் கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்த கீரநத்தம் பகுதியில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், ராஜபாண்டியன் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் செய்ய மறுத்த காதலி… விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞர்…

திருமணம் செய்துகொள்ள ராஜபாண்டி வற்புறுத்தி வந்த நிலையில், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால், மனமுடைந்த அவர் நேற்று தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை சம்பவம் குறித்து, ராஜபாண்டியன் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.