பெற்ற குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்… தந்தை, கள்ளக்காதலி மீது போக்சோ வழக்கு பாய்ந்தது…

 

பெற்ற குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்… தந்தை, கள்ளக்காதலி மீது போக்சோ வழக்கு பாய்ந்தது…

கோவை

கோவையில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து, பெற்ற குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை மீது, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கேரளாவை சேர்ந்தவர் சானித். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சானித், கோவை மாவட்டம் சின்ன தடாகம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது, அவருக்கு அதே பகுதியை சேர்ந்த கீதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனை கண்டித்ததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால், அவர் கடந்த ஓராண்டாக கீதாவுடன் தனியே வசித்து வருகிறார்.

இதனை அடுத்து, சானித் மனைவி கேரளாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி வீட்டை காலி செய்வதற்காக சானித் மனைவி குழந்தைகளுடன், சின்ன தடாகத்திற்கு வந்திருந்தார். அப்போது, வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் திடீரென மாயமாகினர்.

பெற்ற குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்… தந்தை, கள்ளக்காதலி மீது போக்சோ வழக்கு பாய்ந்தது…

இதனால், அவர்களை தேடியபோது மாலை இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, தந்தை சானித் தங்களை கீதாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தியதுடன், உடலில் சூடு வைத்ததாகவும். மேலும், ஆடைகளை அவிழ்த்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.

இதனை கேட்டு, அதிர்ச்சியடைந்த அவர், துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சானித் மற்றும் கீதா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.