கோயம்பேடு சந்தை திறப்பு : ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்!

 

கோயம்பேடு சந்தை திறப்பு : ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்!

சென்னையில் குறைவாகவே இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதன் காரணமாக பெருந்தொற்றாக உருவெடுத்தது. கோயம்பேடு வியாபாரிகள் மூலம் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மூலமாக மற்ற வியாபாரிகள், பொதுமக்கள், காய்கறி இறக்குமதி செய்ய வந்தவர்கள் என பன்மடங்காக பாதிப்பு அதிகரித்தது. இதனால் அந்த சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை தொடங்கப்பட்டது. மேலும், பழ மார்க்கெட் மாதாவர சந்தைக்கு மாற்றப்பட்டது.

கோயம்பேடு சந்தை திறப்பு : ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்!

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட் திறக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

கோயம்பேடு சந்தை திறப்பு : ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்!

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையை விரைவில் திறப்பது தொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மார்க்கெட் வளாகத்தில் 2 கோடியில் நடைபெறும் சாலை பணிகள், கழிவறை பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அங்காடி நிர்வாக அதிகாரி கோவிந்தராஜுவும் மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்தனர். கொரோனா பரவல் தடுப்பு காரணமாக மே 5ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.