கோவை- மூதாட்டியை கொன்று பணம், நகை கொள்ளை – 5 பேர் கைது

 

கோவை- மூதாட்டியை கொன்று பணம், நகை கொள்ளை – 5 பேர் கைது

கோவை

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலைசெய்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.கோவை வைசியாள் வீதி கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் தனலட்சுமி (62). இவர் கடந்த 30ஆம் தேதி மர்மநபர்களால் கத்தியால் குத்தி படுகொலை செய்யபட்ட நிலையில், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

கோவை- மூதாட்டியை கொன்று பணம், நகை கொள்ளை – 5 பேர் கைது

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி லதா என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது மளிகை பொருட்கள் வாங்க செல்லும்போது தனலெட்சுமியுடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், தனலட்சுமியிடம் ஏராளமான பணம் மற்றும் நகைகள் இருப்பது தெரியவரவே அதனை தனது தம்பி திலக் என்பவருடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும் கூறினார். மேலும், சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் தனலட்சுமி வீட்டிற்கு சென்ற திலக் மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோர், தனலட்சுமிக்கு

கோவை- மூதாட்டியை கொன்று பணம், நகை கொள்ளை – 5 பேர் கைது

விஷம் கலந்த இனிப்பை சாப்பிட்ட கொடுத்துள்ளனர். அதை அறிந்து தனலட்சுமி கூச்சலிடவே அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து லதா, அவரது சகோதிரி மாலா மற்றும் திலக்கின் கூட்டாளிகள் செல்வம், மகேஷ்குமார், சத்தியசீலன் ஆகியோரை கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்து 70 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மீட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள திலக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.