கோவையில் வளர்ப்பு நாய் கொடூரமாக அடித்துக்கொலை… இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

 

கோவையில் வளர்ப்பு நாய் கொடூரமாக அடித்துக்கொலை… இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

கோவை

கோவையில் வளர்ப்பு நாயை மரத்தில் கட்டிவைத்து கொடூரமாக அடித்துக்கொன்ற இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை பீளமேடு எல்லைதோட்டம் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில், அவரது வீட்டில் குடியிருக்கும் சீனவாசன் என்பவரது உறவினரை நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது, நாயை மரத்தில் கட்டிப்போட்டு கடுமையாக தாக்கி உள்ளார்.

கோவையில் வளர்ப்பு நாய் கொடூரமாக அடித்துக்கொலை… இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

இதில் படுகாயமடைந்த நாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது. இதுகுறித்து பாலசுந்தரம், விலங்குகள் நல வாரியத்துக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், நல வாரிய அதிகாரி பிரதீப் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாய் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் சீனிவாசன் மற்றும் அவருக்கு உதவிய இளைஞர் ஆகியோர் மீது விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உறவினரை கடித்த நாயை கொடூரமாக அடித்துகொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது.