நெருங்கும் சட்டமன்ற தேர்தல் : கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்!
இன்னும் 8 மாத காலத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்கான பணிகளை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் துவங்கிவிட்டன. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்ட நிர்வாகிகள் நியமிப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக செய்து வருகிறது .
'கோவை வடக்கு – தெற்கு – கிழக்கு மற்றும் கோவை மாநகர் கிழக்கு – மேற்கு ஆகிய மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்'
– கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு.#DMK #MKStalin pic.twitter.com/vU3P33KKny
— DMK (@arivalayam) August 15, 2020
இந்நிலையில் கோவை வடக்கு – தெற்கு – கிழக்கு மற்றும் கோவை மாநகர் கிழக்கு – மேற்கு ஆகிய மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
கோவை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக சி.ஆர். ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக தென்றல் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கோவை கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக சேனாதிபதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக கார்த்திக் எம்எல்ஏ மற்றும் கோவை மாநகர மேற்கு கழகப் பொறுப்பாளராக என். கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.