17 வயது சிறுமியை கடத்திச்சென்ற இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது

 

17 வயது சிறுமியை கடத்திச்சென்ற இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது

கோவை

கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் பழகி, அவரை கடத்திச்சென்றதாக இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த
வயது 17 சிறுமி, கடந்த 18 ஆம் தேதியன்று மாயமானதாக, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், சிறுமி புலியகுளம் பகுதியை சேர்ந்த இன்பாண்ட் டேனியல் (25) என்பவருடன் மதுரைக்கு சென்றுள்ளதாக

17 வயது சிறுமியை கடத்திச்சென்ற இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது

போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மதுரைக்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் கோவை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாகவும், பெற்றோர் சம்மதம் கிடைக்காது என்பதால் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சிறுமி மைனர் பெண்

17 வயது சிறுமியை கடத்திச்சென்ற இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது

என்பதால் இந்த வழக்கு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, இன்பாண்ட் டேனியல் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.