கோவை- ஆணிப்படுக்கையில் பறையிசை ஆட்டம்- இளம்பெண் சாதனை!
கோவை
கோவையை அடுத்த பூலுவபட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆணிப்படுக்கையில் நின்றபடி பறையிசை நடத்திய சாதனை செய்துள்ளார். கோவையில் கல்லூரி மாணவர்களை வைத்து கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் கிராமிய புதல்வன் கலை குழுவை நடத்தி வருபவர் கலையரசன்.
தமிழக அரசின் கலை பிரிவில் தூதராகவும் கலையரசன் உள்ளார். இவரது குழுவில் பறையிசை பயின்று வருபவர் கோவையை அடுத்த பூலவபட்டி கிராமத்தை சேர்ந்த அருள்மொழி.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் பேரூர் தமிழ்கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்று வருகிறார். தனது தந்தையின் கனவை நனவாக்கும் வகையில் சுமார் ஒரு வருடமாக ஆணி படுக்கையில் நின்றபடி பறையிசைக்க பயிற்சி பெற்று வந்துள்ளார்.
ஆணிப்படுக்கையில் பறையிசை ஆட்டம்- இளம்பெண் சாதனை!#bedofnails #parai #paraimusic #record #prize #TTN pic.twitter.com/t7fFilDIIh
— Top Tamil News (@toptamilnews) October 5, 2020
இந்த நிலையில், தற்போது ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து ஆணி படுக்கையில் நின்று பறையிசைத்து சாதனை புரிந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், எங்களது கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்வதே பெரும் சவாலாக உள்ள சூழ்நிலையில், தான் சாதனையை செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
அவரது சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.