கோவை: ஸ்டாலின் முதல்வராக தி.மு.க-வினர் நடத்திய சிறப்பு பூஜை!

 

கோவை: ஸ்டாலின் முதல்வராக தி.மு.க-வினர் நடத்திய சிறப்பு பூஜை!


தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக வேண்டும் என்று கோவை தி.மு.க நிர்வாகிகள் கோவிலில் வழிபாடு செய்து அன்னதானம் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: ஸ்டாலின் முதல்வராக தி.மு.க-வினர் நடத்திய சிறப்பு பூஜை!


கடந்த வாரம் பொள்ளாச்சியில் உள்ள கோவிலில் கொரோனா ஒழிய வேண்டும் என்று தி.மு.க-வினர் சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் செய்தனர். இந்த வாரம் கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கம்பீர சித்தி விநாயகர் கோவிலில் தி.மு.க-வினர் வழிபாடு செய்து அன்னதானம் செய்துள்ளனர்.
கோவை தடாகம் சாலையில் இடையர்பாளையம் அண்ணாநகரில் கம்பீர சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இங்கு கடந்த வாரம் அ.தி.மு.க நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். இதைத் தொடர்ந்து அதே கோவிலில் தி.மு.க-வினர் ஸ்டாலின் முதல்வராக வர வேண்டி வழிபாடு செய்து அன்னதானம் வழங்கியுள்ளனர்.

கோவை: ஸ்டாலின் முதல்வராக தி.மு.க-வினர் நடத்திய சிறப்பு பூஜை!


தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பொன்னரசு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மாலதி, மீனவரணி துணை அமைப்பாளர் வெங்கட் உள்ளிட்டவர்கள் கோவிலுக்கு வந்து கொரோனா ஒழியவும், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்றும் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். வழிபாடு முடிந்த பிறகு தி.மு.க நிர்வாகிகள் மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
கட்சித் தலைமை கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசிக் கொண்டிருக்க, வாக்காளர்களைக் கவர தி.மு.க தொண்டர்கள் எப்படி எல்லாம் வேஷம் போடுகின்றனர் என்று பொது மக்கள் தி.மு.க-வினர் காதுபட பேசிச் சென்றனர்.