கோவை- சாலையோரத்தில் உறங்கியர் தலையில் கல்லைப்போட்டு கொலை

 

கோவை- சாலையோரத்தில் உறங்கியர் தலையில் கல்லைப்போட்டு கொலை

கோவை

கோவையில் சாலையோரத்தில் படுத்து உறங்கியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை- சாலையோரத்தில் உறங்கியர் தலையில் கல்லைப்போட்டு கொலை

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையோரத்தில் நேற்று முன்தினம் இரவு படுத்திருந்த ஒருவரின் தலையில் மர்மநபர்கள் கல்லைப்போட்டு தாக்கி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், காட்டூர் போலீசார் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை- சாலையோரத்தில் உறங்கியர் தலையில் கல்லைப்போட்டு கொலை

போலீசாரின் விசாரனையில் அவர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பதும் மதுபோதையில் வந்த 2 நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரது தலையில் கல்லை போட்டுவிட்டு சென்றுள்ளதும் தெரியவந்தது. இந்நிலையில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாலகிருஷ்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காட்டூர் போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.