கோவையில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

 

கோவையில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

கோவை

கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊட்டியை சேர்ந்த பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தலை பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவரது மகன் பிரவீன்குமார் (21). பொறியியல் பட்டதாரியான இவர், கோவை போத்தனூர் எல்.ஐ.சி காலனி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பிரவீனுடன், அவரது கல்லூரி நண்பர்களும் தங்கியிருந்து வந்தனர்.

கோவையில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிரவீன் மனவேதனையுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இன்று நண்பர்கள் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த அவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அறைக்கு திரும்பியபோது பிரவீன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.