கோவை- மனைவியை பூரி கட்டையால் தாக்கிய பூவியாபாரி கைது
Oct 17, 2020, 16:32 IST1602932536000
கோவை
மதுப்பழக்கத்தை நிறுத்த சொன்ன மனைவியை பூரி கட்டையால் தாக்கிய பூ வியாபாரியை போலீசார் கைது
செய்தனர். கோவை கரும்புக்கடை திப்புநகரை சேர்ந்தவர் பூ வியாபாரி காஜா உசேன். இவருக்கு மதுப்பழக்கம் உள்ளதால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு, மதுபோதையில் வீட்டிற்கு வந்த காஜா உசேனை, அவரது மனைவி கடுமையாக கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காஜா பூரி கட்டையால் மனைவியை அடித்துள்ளார். இதில் அவரது நெற்றியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார், காஜா உசேனை கைதுசெய்தனர்