பணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு மலர் அஞ்சலி

 

பணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு மலர் அஞ்சலி

கோவை

கோவை மாவட்டம் மதுக்கரையில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படும் நிலையில், கோவை மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முழுவதும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு

பணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு மலர் அஞ்சலி

அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, நேற்று கோவை மதுக்கரை காவல் நிலைய போலீசார் சார்பில், குவாரி அலுவலகம் அருகே அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்கள் படத்திற்கு, மதுக்கரை ஆய்வாளர்

பணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு மலர் அஞ்சலி

முருகேசன், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர். மேலும் அங்கு வந்த பொதுமக்களுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து பள்ளி மாணவிகள் மற்றும் நடக கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.